கர்மா என்பது ஒரு செயலின் தன்மை மற்றும் விளைவுகள் குறித்தது. அந்த
கர்மகளை சித்தர்கள் எட்டு வகைகளாக பிரிக்கின்றனர் அவை
1 ஆகர்ஷணம்
2 உச்சாடனம்
3 பேதனம்
4 மாரணம்
5 மோகனம்
6 வசியம்
7 வித்துவேடணம்
8 தம்பனம்
என்பவை இவற்றை அடைய ரசமும் மூலிகைகளும் இணைப்பு வேண்டும்.
வாலைரசம்
ரசமணி செய்ய தூய ரசம் வேண்டும். தூயரசம் கிடைப்பது அரிது எனவே நாமே தாயாரிப்பதுவே சிறந்தது. உலாந்தால்லிங்கம் 250 கிராம், தரசுகொடி வேர் கணிசமான அளவு எடுத்து கொள்ளவும். சமபருமன் கொண்ட மண்பானை 2 எடுத்து அதன் வாய் பகுதியை தரையில் தேய்த்து சமமாக செய்யவும், பின் ஒரு பானையில் தூள் செய்த உலாந்தால்லிங்கம் சிறிது தூவவும் பின் தரசுகொடிவேரை பரப்பவும் பின் மீண்டும் உலாந்தால்லிங்கம் சிறிது தூவவும் பின் தரசுகொடிவேரை பரப்பவும் இவ்வாறு 250 கிராம் உலாந்தால்லிங்கம் முழுமையும் தூவிய பின் மற்றொரு பானையை அதன் மீது முடி இரு பானைக்கும் சிறு சந்து கூட இல்லாமல் இணைத்து இரு பானைக்கும் உளுந்தல் 7 சீலைமண் செய். பின்னர் கீழ் பானையை அடுப்பில் ஏற்றி மெதுவாக் தீயை எரி மேல் பானையின் மீது துணியை நனைத்து போடவும், அந்த துணி
காயகாய நனைத்து நனைத்து பானையின் மேல் போடவும். சரியாக ஒன்பதுமணி நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். எட்டு மணி நேரம் கழித்து பானையை படுக்கை வாக்கில் வைத்து சீலையை பிரிக்கவும்.
மேல் பானையின் உள்ளே ரசம் பூ போல ஒட்டி இருக்கும், அதை சேமித்து வை. குறையாமல் 225 கிராம் இருக்கும்.
சுத்தம் செய்யும் வழிமுறை
ரசமணி செய்ய பலவழிகள் உண்டு.அவை ஒவ்வொருவழிகளுக்கும்அதனதன் தன்மை மாறும்.பாஸானகட்டு, முலிகை கட்டு மற்றும் உப்பு கட்டு என சில வழிகள் உண்டு. ஆனால் முலிகை கட்டேசிறப்பானதாகும். ரசத்தை கட்டும் மூலிகைகள் பல உண்டு.
